ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது. “இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும்” என்றனர். குறிப்பாக இந்த கையடக்க கணினி சென்னை எழும்பூர் -மதுரை இடையே […]
