தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் […]
