முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவெண்ணைநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவராக இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைத்தியநாதன் இறந்துவிட்டார். இவரது வீட்டில் வைத்தியநாதனின் மனைவி அனுசுயா உள்ளார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம […]
