டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு […]
