முத்திரையிடப்படாத எடைக்கற்கள் உள்ளிட்ட 92 உபகரணங்களை வாரச்சந்தையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் இருக்கும் வாரச் சந்தையில் வியாபாரிகள் முத்திரையிடப்படாத எடைக் கற்களை பயன்படுத்தி வருவதாக தொழிலாளர் நலத்துறைக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை ஆணையரான ராஜ்குமாரின் தலைமையில் உதவி ஆய்வாளரான கதிரவன், செந்தில், பிரியதர்ஷினி, செல்வராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு வாரச்சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் முத்திரையிடப்படாத எடை கற்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனரா என […]
