முதியவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடையடியூர் பகுதியில் நாகபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகளை காணவில்லை. இதனை தேடிய போது நாகபத்திரனுக்கு சாயர்புரம் அருகிலுள்ள நட்டாத்தி-மீனாட்சிபட்டி சாலையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நாகபத்திரன் மாடுகளை அழைத்து வருவதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் மீனாட்சிபட்டி சாலையோரத்தில் நாகபத்திரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து […]
