மது வாங்க சென்ற முதியவரை இரண்டு பேர் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மணல்காட்டானூர் பகுதியில் ஆறுமுகநயினார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆறுமுக நயினார் வெங்கடாம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு பார் நடத்திவரும் வீரகேரளம்புதூர் பகுதியில் வசிக்கும் முத்துராஜா மற்றும் முருகன் என்பவர்கள் இணைந்து ஆறுமுக நயினாரிடம் கடையை மூடும் நேரத்திற்கு சென்று மது வாங்குகிறாயா என்று கூறி அவரை திட்டியதோடு தாக்கி உள்ளனர். […]
