முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]
