கோயம்புத்தூரிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயிலில் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனியார் மயமாக்கல் செயல்பாட்டை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடகோவையிலிருந்து சீரடிக்கு முதல் தனியார்ரயில் இயங்க ரயில்வே அனுமதித்து இருக்கிறது. கோவையைச் சேர்ந்த எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனம் இதனை இயக்க உள்ளது. ரயில்வண்டியானது ரயில்வேக்கு சொந்தம். அதேபோல் […]
