பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான விளையாட்டுகளில் வீரர்-வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவாவை எதிர்கொண்டார். […]
