தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதால் அரசு தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் ஆக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகரில் கொரோனா தீவிரம் காட்டுவதால் சென்னை மாநகர பேருந்துகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து […]
