சோமாலியா நாட்டில் இயங்கும் முக்கிய தீவிரவாத இயக்கமான அல்ஷபாப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அல்ஷபாப் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீவிரவாத அமைப்பினர் சர்வதேச நாடுகள் அங்கீகரித்த சோமாலிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயன்று வருகிறார்கள். இதற்காக ராணுவம் மற்றும் மக்களை நோக்கி அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அல்ஷபாப் இயக்கத்தினுடைய முக்கிய தலைவராக இருக்கும் அப்துல்லா […]
