தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே […]
