மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றுள்ளார். மலேசியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து முகைதின் யாசின் பிரதமராக இருந்து வந்தார். அதன்பின்பு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து, கடந்த திங்கட்கிழமை அன்று பதவி விலகினார். இந்நிலையில் இவரின் அரசில் துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி, ஆட்சியில் அமர தேவைப்படும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். […]
