சுவிட்சர்லாந்தில் முகாமில் தங்கியிருந்தவர் திடீரென காணாமல் போனதை தொடர்ந்து, அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பெர்ன் மாநிலத்தின் Loucherhorn பகுதியில் முகாம் அமைத்து ஒரு நபர் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதலில் அவர் பிணமாக கண்டுபிடிக்கபட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் விபத்தில் சிக்கி உயிர் […]
