முகநூலில் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் திருமணமான 25 வயது பெண்ணுக்கு வாலிபர் ஒருவர் முகநூல் மூலமாக அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தொந்தரவு செய்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் வசிக்கும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
