பெண் ஒருவர் தான் காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் மருது பாண்டியன். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மூழ்கியிருப்பதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மருது பாண்டியனின் முகநூல் பக்கத்தில் அனுசுயா என்ற பெண் அறிமுகமானதால் அவருடன் பேசி வந்துள்ளார். […]
