மீன் வலையில் சிக்கிய 10 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பாற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் வலை விரித்துள்ளனர். இந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். […]
