மீன் மார்க்கெட்டில் அமைந்துள்ள 2 கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து திடல் பகுதிக்கு அருகில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ராஜா என்பவருக்கு சொந்தமான மீன் கடையும், விஜயா என்பவருக்கு சொந்தமான காய்கறி கடையும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த 2 கடைகளிலும் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
