கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், மூட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாகக் கொண்டு 1000 க்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு […]
