வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மீனவ கிராமங்களில் மீனவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப் படகு மற்றும் சைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். மேலும் கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க காலை மற்றும் மாலையில் கடலுக்கு செல்வார்கள். இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த […]
