இரண்டு நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை என்பதால் தக்கலை சந்தையில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அலை மோதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுக்கும் சேர்த்து வெள்ளிக்கிழமையே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றுள்ளனர். இதனையடுத்து விற்பனைக்கு கொண்டு வந்த அனைத்து மீன்களும் விற்று போனதால் குமரிமாவட்டத்தில் […]
