புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் வீரவேல் உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த INS பங்காரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்து. இதை பார்த்த மீனவர்கள் இலங்கை கடற்படை என்று […]
