மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் நகர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தலையில் கடுமையான ரத்த காயங்களுடன் அலெக்ஸ் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
