கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் விசை படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் இருக்கின்றது. இவர்கள் மீன்வளத்துறை விதிமுறைகளை பின்பற்றி அதிகாலை கடலுக்கு சென்று இரவு 9:00 மணிக்கு கரைக்கு திரும்புவார்கள். மேலும் மீன் பிடித்து வரக்கூடிய மீன்களை உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை மீன்பிடி துறைமுகத்தில் நேரடியாக இரவு நடைபெறும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக […]
