சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( 41 ) என்பவருடைய பாஸ்போர்ட் சோதிக்கப்பட்டது. அப்போது, அவர் ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அதாவது முருகன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். […]
