தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணியினால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்காத மஞ்சப்பையை பயன்படுத்த, மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தனி குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. […]
