பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் இன்று முதல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதால் டெல்லியை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் அமர்ந்து விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டம் நாட்டையே உலுக்கியது.2020ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020 நவம்பர் 26ம் தேதி போராட்டம் தொடங்கியது. இதை தொடர்ந்து 3 சட்டங்களையும் திரும்ப […]
