மினி வேன் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்ராவந்தவாடி கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேன் திடீரென சந்திரன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாய்ச்சல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
