ஊரக உள்ளாட்சிகளில் உயர் கோபுரம் மின்விளக்குகளை மறு உத்தரவு வரும் வரையிலும் அமைக்கக்கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக எந்த விதமான நிதியையும் பயன்படுத்தக்கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது, மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி போன்ற மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில், எந்த […]
