அம்மாபாளையம் பகுதியில் மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தை நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் அருகே இருக்கும் அம்மாபாளையம் கிராமத்தில் ஏ.எஸ்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சில மாதங்களாகவே எரியாமல் இருந்து வருகின்றது. இது பற்றி பொதுமக்கள் ஊராட்சி தலைவர் மூலம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகின்றது. ஆகையால் அப்பகுதி மக்கள் நேற்று இரவு எரியாமல் இருந்த மின் கம்பங்களில் தீபந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். இது […]
