ஆந்திரமாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துகொண்டிருந்தது. அப்போது பள்ளி வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று கழன்று தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவியின் தலையில் விழுந்தது. இதன் காரணமாக மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்தார். இதையடுத்து மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்ததைக் பார்த்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் உடனடியாக தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். […]
