தமிழகத்தில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கடைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள், எண்ணெய் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த ரேஷன் கார்டு அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. […]
