தந்தை ஒருவர் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி வருவதற்காக மின்சார வயரில் நடந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வாம்கோ புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தங்கள் உடைமைகளை இழந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பிட கூட உணவு இல்லாமல் தவித்து […]
