செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எங்களுடைய தலைமை அலுவலகத்திலேயே அது சம்பந்தமான பேட்டியை கொடுத்தேன். இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதா என்பது, ஏழை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு, ஒரு பாதுகாப்பு இல்லாத, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, அதே போல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, குடிசை வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. […]
