மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாக கூடிய நிலை ஏற்படலாம். மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது, ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் அரசு மின் வாரியங்களை மூடும் நிலையும் ஏற்படலாம் என எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
