மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வடமலை பாளையம் காலனியில் கிட்டான் ஆறுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுச்சாமி வழக்கம்போல் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு மின்மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராத விதமாக ஆறுச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆறுச்சாமியை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு […]
