மின்சாரம் பாய்ந்து மாணவி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை பகுதியில் கூலித் தொழிலாளியான மலைச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாபிரபு என்ற மகனும், பத்தாம் வகுப்பு படித்து வந்த மதுபாலா என்ற மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபாலா தனது வீட்டில் டி.வி பார்ப்பதற்காக அங்கிருந்த சுவிட்சை போடும்போது திடீரென அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
