பெயிண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். அதன்பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு பரிசோதனை […]
