மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் 3 டன் வைக்கோல் எரிந்து நாசமாயின. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள ரெட்டி காலனிக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி சுமார் 4 டன் வைக்கோல் பாரத்தை ஏற்றிக்கொண்டு விற்பதற்காக ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை சேந்தமங்கலம் அருகில் உள்ள ராமநாதபுரம் புதூரில் வசித்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ரெட்டி காலனியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென்று லாரி பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் […]
