தேனி மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த விவசாயி மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கோட்டூர் பகுதியில் முருகேசன்(56) என்பவர் வசித்துவந்துள்ளார். இவரது மனைவி மலையம்மாள். இந்நிலையில் விவசாயியான முருகேசன் தேனி-கம்பம் சாலையில் உள்ள அவரது தோட்டத்திற்கு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது முருகேசன் சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து மண்வெட்டியை எடுத்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக […]
