அமெரிக்கா மாநிலமான மிசோரியில் கொரோனா பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சீனாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்புகளை உலக நாடுகளுக்கு மறைத்தல், கொரோனா பற்றிய தகவல்களை அறிந்த நபர்களை கைது செய்தல், உலக நாடுகள் பலவற்றிற்கு பொருளாதார பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சீனாவை எதிர்த்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பரப்பிய சீனாவை எதிர்த்து முதல் வழக்கை அமெரிக்காவில் இருக்கும் மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. […]
