இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 29,164 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 88,74,291 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 449 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,30,519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 40,791 பேர் குணமடைந்து […]
