சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் போலியான வாகன எண்களை பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர். இதன் காரணமாக குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. அதேபோன்று போலி நம்பர்பிளேட் பொருத்தி போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிலபேர் துணிச்சலாக வலம் வருகின்றனர். இதனால் வாகன எண்களின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பரிவாஹன் இணையதளம் வாயிலாக வாஹன் செயலியை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பதிவிறக்கம் செய்துள்ளனர். […]
