இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் இளையான்குடி, கண்மாய்க்கரை, வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதி, பஜார் […]
