சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வார்டு வாரியாக வாகனங்களில் கொண்டு வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம், தாதகப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகளும் […]
