மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம் ஆகும். இதில் பல்வேறு மாடுகள் காட்டின் மையபகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு செல்லும் மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாடுகள் காட்டிலேயே வசித்து […]
