மாமூல் வசூல் வாங்கிய குற்றத்திற்காக போக்குவரத்து காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுக்காதால் லாரி கிளீனர் ஒருவரை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்கி விட்டனர். இதனால் அந்த லாரி கிளீனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் படி உயர் காவல் […]
