கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23 நிதி ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்களது பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை […]
