கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுண்டக்காப்பட்டி கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வேடியப்பன் நிலைதடுமாறி உள்ளே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த வேடியப்பன் தண்ணிரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
